புதன், 3 பிப்ரவரி, 2010

புதிய ஆண்டு











இமை மூடாது
பார்த்திருந்தாலும்
இனி திரும்பாது
சிதறிய காலங்கள்!

இதழ் மூடாது
பேசினாலும்
இனி திரும்பாது
இழந்த வருடங்கள்!

இடை விடாது
சிந்தித்தாலும்
இனி வராது
சென்ற பருவங்கள்!

இழந்தவற்றை
மறந்திருப்போம்

இனி வரும் நாட்களை
வரவேற்போம்!
காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை!
கவிதைப் படிப்பதும் அது போலதான்!
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :)

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி
உங்கள் நாளை இனிமையாக்க இதுவொரு முயற்சி